2024 மே 16, வியாழக்கிழமை

பஸ் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு , 32 பேர் காயம்

Janu   / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோ சிட்டியின் தலைநகரம் பகுதியில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற  பஸ் விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன்  மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாக மெக்சிகோவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய மெக்சிகோவில் உள்ள குவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள சான் லூயிஸ் டி லா பாஸில் இருந்து மெக்சிகோ நகருக்கு தெற்கே உள்ள சால்மா சரணாலயத்திற்கு பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றே  இவ்வாறு நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இவ் விபத்தில் 14 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் ,  மேலும்  32 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .