2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களுக்குத் தட்டுப்பாடு

Ilango Bharathy   / 2022 ஜூன் 17 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களுக்குத் தட்டுப்பாடு   ஏற்பட்டுள்ளதாக பிரபல ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
 
ரஷ்யா,  உக்ரேன் இடையே நீடித்து வரும் போர் காரணமாக அந்நாடுகளில் இருந்து வரும் உரம் வழங்கல் தடைப்பட்டுள்ளதால்,  சுகாதார துவாய்களின்  தயாரிப்புக்கு மூலப்பொருளான பருத்தியின் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன் கொரோனாப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறை காரணமாகவும் இதன்   உற்பத்தி குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஓராண்டுக்கு முன் இருந்ததைவிட தற்போது 10 % சுகாதாரத் துவாய்களுக்கான விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X