Ilango Bharathy / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்தின் சரபுரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ‘வால்‘. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தனது 8 ஆவது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் வகையில் வால், தனது மனைவிக்கு வித்தியாசமான பரிசொன்றைக் கொடுக்க விரும்பியுள்ளார்.

இதனையடுத்து பச்சை குத்தும் நிலையமொன்றுக்குச் சென்ற அவர் தனது திருமண சான்றிதழை மணிக்கட்டில் முழுதாகப் பச்சை குத்தியுள்ளார்.
இதற்கு அவர் சுமார் 8 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டியிருந்துள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது கையைப் பார்த்த மனைவில் அதிர்ச்சியில் உறைந்து போனார் எனவும் தனது கைப் பார்க்கும் போதெல்லாம் தான் மனைவியுடன் கழித்த நல்ல நேரங்கள் நினைவுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
03 Feb 2026