2026 மே 14, வியாழக்கிழமை

யாரோ என நினைத்து தனது செந்த மகளையே கொலை செய்த தந்தை

Ilango Bharathy   / 2022 ஜனவரி 03 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபர் ஒருவர் ‘தனது வீட்டுக்குள் யாரோ அந்நியர் நுழைந்து விட்டதாக எண்ணி தனது சொந்த  மகளையே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒஹியோ மாகாணத்தின் கொலம்பஸ் புறநகர்ப் பகுதியில், ஜேன் ஹேர்ஸ்டன் என்ற 16 வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு அவரது தந்தையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

 இதையடுத்து, தங்கள் மகள் வீட்டின் கார் ஷெட்டில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக அவரது தாயார் அவசரகாலச் சேவைப் பிரிவுக்கு அழைக்கவே அங்கு விரைந்து வந்த அவசர கால பிரிவினர் மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் குறித்த மாணவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அமெரிக்காவில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு உயிரிழப்போர் எண்ணிக்கை, குறிப்பாக இக் கொரோனா காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .