2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

வானில் சுழன்று விழுந்த துருக்கி இராணுவ விமானம்

Editorial   / 2025 நவம்பர் 12 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கி நாட்டு ராணுவத்திற்குச் சொந்தமான சி-130 (C-130) ரக சரக்கு விமானம், செவ்வாய்க்கிழமை (11) அன்று அஜர்பைஜான் எல்லைக்கு அருகில் உள்ள ஜார்ஜியா நாட்டில் விபத்துக்குள்ளானது. அஜர்பைஜானில் இருந்து துருக்கி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த இந்த விமானத்தில், விமானப் பணியாளர்கள் உட்பட 20 ராணுவ வீரர்கள் பயணித்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானம் சுழன்று தரையை நோக்கி விழுந்தபோது, வெள்ளைப் புகையைக் கிளப்பிய அதிர்ச்சிகரமான காட்சியை துருக்கி செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பின. விபத்து குறித்து துருக்கி மற்றும் ஜார்ஜியா அதிகாரிகள் உறுதிப்படுத்தியபோதும், உடனடியாக உயிரிழப்புகள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

 

இருப்பினும், இந்தச் சம்பவத்தில் உயிர் இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மறைமுகமாகக் குறிப்பிட்டார். ஜார்ஜியாவின் சிக்னாக்கி நகராட்சியில், அஜர்பைஜான் எல்லைக்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகவும், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஜார்ஜிய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

விபத்தைத் தொடர்ந்து, துருக்கி, அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியாவின் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X