Janu / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் மசாய் மாரா தேசிய சரணாலயத்திற்கு சென்று கொண்டிருந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்த தேசிய சரணாலயம் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். டயானி விமான நிலையத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பாங்கான மற்றும் காட்டுப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றதுடன் குறித்த இடம் மலைப்பகுதி என்பதால் மீட்பு பணிகளில் சிரமம் நீடிக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago