2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

வியட்நாமில் குரங்கம்மை பரவல் - 6 பேர் பலி

Mayu   / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் குரங்கம்மை நோய் வேகமாக பரவுகிறது. இந்நிலையில் நாட்டின் தெற்கு மாகாணமான லாங் ஆன்னில் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 117 பேர் குரங்கம்மை பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, நவம்பர் மாதம் முதல் தொற்றுநோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஹோ சி மின் நகரத்தின் வெப்பமண்டல நோய்களுக்கான வைத்தியசாலையின் வை்தியர் ஹுய்ன் தி துய் ஹோ தெரிவிக்கையில்:

கடந்த மூன்று மாதங்களில் வை்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 49 பாதிப்புகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் குணமடைந்ததுடன், மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்று அவர் தெரிவித்துள்ளார்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X