Editorial / 2024 ஓகஸ்ட் 05 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

மக்கள் கிளர்ச்சியின் எதிரொலியாக, வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா லண்டனுக்கு புறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து இன்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு அந்நாட்டு ராணுவ விமானத்தில் தனது சகோதரி ஹேக் ரேஹானாவுடன் கனபாபன் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டார். அவர்கள் புறப்பட்ட விமானம் திரிபுரா வழியாக புதுடெல்லி நோக்கி சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவர்கள் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் புதுடெல்லி வந்து பின்னர் அங்கிருந்து லண்டன் செல்லலாம் அல்லது புதுடெல்லியிலேயே தங்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அரசிடம் ஷேக் ஹசீனா அடைக்கலம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் எனவே, அவரோடு ஷேக் ஹசீனா லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சேலையை போராட்ட காரர் ஒருவர் கட்டியிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
20 minute ago
27 minute ago
31 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
31 minute ago
38 minute ago