2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சென்ரலைட்ஸ் அணி 5 இலக்குகளால் வெற்றி

Kogilavani   / 2014 ஜனவரி 28 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

யாழ்.மாவட்ட துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் இருபது – 20 சுற்றுப்போட்டியில் சென்ரலைட்ஸ் விளையாட்டுக்கழகம் 5 இலக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.

யாழ்.நியுஸ்டார் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் அனுசரணையுடன் இப்போட்டியை நடத்தி வருகின்றது.

கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற இப்போட்டியில் யாழ்.பற்றீசியன் விளையாட்டுக்கழக அணியும் சென்ரலைட்ஸ் விளையாட்டுக்கழகமும் மோதிகொண்டன. 

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பற்றீசியன் விளையாட்டுக்கழக அணி 20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் நோபேட் 32, அஜித் 18, அலிஸ்ரன் 11 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். உதிரிகளாக 10 ஓட்டங்கள் பெறப்பட்டன.
பந்துவீச்சில் சென்ரலைட்ஸ் விளையாட்டுக்கழக அணி சார்பாக சௌமிதரன் 02 (05), கோகுலன் 02 (11), பிரியகாந் 2 (23), சாள்ஸ் 2 (25) இலக்குகளைக் கைப்பற்றினர்.

113 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்ரலைட்ஸ் துடுப்பாட்ட அணி 14 பந்துபரிமாற்றங்களில் 5 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஜேம்ஸ் 34, ஸ்டீபன் 23, செல்ரன் 12 பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பற்றீசியன் அணி சார்பாக லிவிங்கடன் 4 (15) இலக்குகளைக் கைப்பற்றினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X