2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அரையிறுதிக்கு தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகம் தகுதி

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரு.நாதன்

தாச்சி விளையாட்டுப் போட்டியில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழக அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

யாழ். மாவட்ட தாச்சி விளையாட்டுச் சங்கத்தின் அனுசரணையுடன் வலி. தெற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் தாச்சி சுற்றுப்போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.

 இச்சுற்றுப் போட்டியின் காலிறுதிப் போட்டிகள் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.

 மின்னொளியில் நடத்தப்படும் இச்சுற்றுப் போட்டியில் நேற்று சனிக்கிழமை   நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், சண்டிலிப்பாய் உதயசூரியன் விளையாட்டுக்கழக அணியும் தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழக அணியும் மோதின.

முதல் பாதியாட்டத்தில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழக அணி 5 : 1 என்ற பழங்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாம் பாதியாட்டத்தில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழக அணி 3 : 2 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்று, ஆட்ட நேர நிறைவில் 8 : 3 என்ற பழங்கள் அடிப்படையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X