2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கதியோனின் அபார பந்துவீச்சினால் ஸ்கந்தா வெற்றி

Super User   / 2014 பெப்ரவரி 27 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நா.நவரத்தினராசா

கே.கே.கதியோன் தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் இரண்டு இனிங்ஸிலும் 10 இலக்குகளைச் சாய்க்க, வீரர்களின் போர் துடுப்பாட்டப் போட்டியில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி 10 இலக்குகளால் அபார வெற்றியீட்டியது.

154 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸிக்காகத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மகாஜனக் கல்லூரி அணி நேற்றைய ஆட்டநேர முடிவின் போது, 21 ஓவர்களில் 4 இலக்குகளை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து இன்று (27) இரண்டவாது நாள் ஆட்டத்தை தொடர்ந்த மகாஜனக் கல்லூரி அணி அடுத்தடுத்து இலக்குகளை இழந்து வந்தது. இறுதியில் 45.3 ஓசர்களில் 156 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் ரி.டிலோசன் 36 ஆர்.ரிசோத் 34 எஸ்.கபிலன் 17 ஜெ.ஜனந்தன் 16 எம்.பவன் 13 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி சார்பாக கே.கே.கதியோன் 5 (49), ஜே.ஜனக்சன் 2 (19), கே.பிரசாத் 2 (05) இலக்குகளைக் கைப்பற்றினர்.

3 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியென்று இரண்டாவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி, 0.3 ஓவர்களில் இலக்குகள் இழப்பின்றி அந்த வெற்றியினை பெற்றுக்கொண்டது.

வீரர்களின் போரில் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஸ்கந்தவரோதயாக் கல்லூரியைச் சேர்ந்த ரி.சரத்குமாரும், சிறந்த களத்தடுப்பாளராக மகாஜனக் கல்லூரியின் ரி.டிலோசனும், சகலதுறை வீரராக ஸ்கந்தவரோதயாக் கல்லூரியைச் சேர்ந்த ஜே.ஜனக்சனும், சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் போட்டியின் நாயகனாகவும் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் கே.கே.கதியோன் தெரிவு செய்யப்பட்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X