2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இலங்கை தரைப்படை அணி வெற்றி பெற்றது

Super User   / 2014 மார்ச் 04 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}



-குணசேகரன் சுரேன், நா.நவரத்தினராசா

இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சம்பியன் ஓஃவ் சம்பியன் அணிகளுக்கிடையிலான கால்ப்பந்தாட்ட போட்டியில் இலங்கை தரைப்படை அணி சம்பியனாகியது.

இலங்கை தரைப்படையின் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் சம்பியனாகிய அணியும், விமானப் படை அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் சம்பியனாகிய அணிகளும் இந்த சம்பியன் ஓஃவ் சம்பியன் போட்டியில் மோதின.

மேற்படி போட்டி சனிக்கிழமை (01) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. போட்டியின் ஆரம்பம் முதல் விமானப் படையணி தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு வந்தது. எனினும் தரைப்படை அணியின் கோல்காப்பாளரின் சாதுரியத்தினால் அது கோலாக மாறுவது தடுக்கப்பட்டது. ஆட்டநேரம் முடியும் வரையிலும் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

தொடர்ந்து, போட்டியின் வெற்றியாளரைத் தீர்;மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. இதில் இலங்கை தரைப்படை படையணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X