2025 ஜூலை 16, புதன்கிழமை

மட்டுவில் ஐங்கரன் அணி சம்பியன்

Super User   / 2014 மார்ச் 30 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


தென்மராட்சி பிரதேச இளைஞர் விளையாட்டுக்கழங்களின் கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற சுற்றுப்போட்டியில் மட்டுவில் ஐங்கரன் இளைஞர் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது.

மேற்படி கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (29) நடைபெற்றது.

இந்த இறுதிப்போட்டியில் மட்டுவில் ஐங்கரன் இளைஞர் கழகத்தை எதிர்த்து மீசாலை சீமா இளைஞர் கழகம் மோதியது.

இதில், ஐங்கரன் விளையாட்டுக்கழகம் 25:23, 23:25, 25:22 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசில்களையும் அணிகளுக்கான கேடயங்களையும், தென்மராட்சி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் செல்வி ரஞ்சனா நவரத்தினம், யாழ். மாவட்ட தேசிய  இளைஞர் சேவைகள் மன்ற உதவி இயக்குநர் ஜ.தவேந்திரன் ஆகியோர் வழங்கிவைத்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X