2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் மீதான வழக்கு ரத்து

Super User   / 2014 ஜூன் 03 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கால்பந்தாட்டா சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் ரொட்ரிகோ, செயலாளர் உப்பாலி ஹேவகே ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சர்வதேசக் கால்பந்தாட்டா சம்மேளனத்தின் கூட்டத்திலும், ஆசிய கால்பந்தாட்டா சம்மேளனத்தின் கூட்டத்திலும் இருவரும் பங்கு பற்றக் கூடாது என காமினி ரன்தெனி என்பவரினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம்  ரஞ்சித் ரொட்ரிகோ, உப்பாலி ஹேவகே இலங்கை கால்பந்தாட்டா சம்மேளனத்தின் ஊழியர்கள் குறித்த கூட்ட தொடர்களில் பங்கு பற்ற முடியும். அத்துடன் தங்கள் பணிகளையும் இடையூறுகள் இன்றி தொடர முடியும் என தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .