2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மத்தியஸ்த்தரைத் தாக்கியமை தொடர்பில் விசாரணை

Super User   / 2014 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    நா.நவரத்தினராசா

அராலி பாரதி விளையாட்டுக்கழக மைதானத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (24) அராலி துனைவி சென். ஸ்டார் விளையாட்டுக் கழக அணி வீரர்கள், மத்தியஸ்தரைத் தாக்கியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலிகாமம் கால்பந்தாட்ட லீக் திங்கட்கிழமை (25) தெரிவித்தது.

மேலும், மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு போட்டித் தடை விதிக்கப்படும் எனவும் லீக் தெரிவித்தது.

இது பற்றித் தெரியவருவதாவது,

அராலி பாரதி விளையாட்டுக் கழக அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை தனது விளையாட்டுக்கழக மைதானத்தில் நடத்தி வருகின்றது.

இதில், ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற போட்டியில், அராலி துனைவி சென் ஸ்டார் அணியும் சென். தோமஸ் அணியும் மோதின.

இதில் சென். தோமஸ் அணி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில் போட்டி முடிவடைந்ததும், அராலி துனைவி சென் ஸ்டார் அணி வீரர்கள் மத்தியஸ்த்தரைத் தாக்கியதுடன், அதனைத் தடுக்கச் சென்ற போட்டி ஏற்பாட்டாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து, வட்டுக்கோட்டை பொலிஸார் மைதானத்திற்குள் நுழைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து போட்டி ஏற்பாட்டாளர்களால், வலிகாமம் கால்பந்தாட்ட லீக்கிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வலிகாம். லீக் தெரிவித்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .