George / 2015 ஜனவரி 31 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட இரண்டு நாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஆட்டமொன்றில் யாழ். மத்திய கல்லூரி வெற்றிபெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை எதிர்த்து கொட்டஹேன ஆனந்தா மகா வித்தியாலயம் மோதியது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய ஆனந்தா மகா வித்தியாலயம் 48.4 ஓவர்களின் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பஷன் ஜெயகலன 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் யாழ். மத்திய கல்லூரி சார்பாக எஸ்.மதுசன் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸை ஆரம்பித்த, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.மதுசன் 28, எஸ்.அலன்ராஜ் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஆனந்தா வீரர் ஏ.எஸ்.குமார 57 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
43 ஓட்டங்கள் பிந்தங்கி இருந்த ஆனந்தா, இரண்டாவது இனிங்ஸூக்காக துடுப்பெடுத்தாடிய 25.4 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் ஏ.எஸ்.குமார 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் யாழ். மத்தி சார்பாக எஸ்.மதுஷன் 4, சி.நிதுஷன் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்கள்.
82 ஓட்டங்களை பெற்றால் என்ற இலக்குடன் 2 ஆவது இனிங்ஸூக்காக துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 16.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் எஸ்.நிரோசன் 38 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
12 minute ago
13 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
32 minute ago