George / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சினேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியில் ரெட் அணி வெற்றி பெற்றது.
புதன்கிழமை(25) இரவு அட்டாளைச்சேனை அர்ஹம் வித்தியாலய மைதானத்தில் சுப்பர்சொனிக் கழகத்தின் முன்னணி கரப்பந்தாட்ட வீரர்கள், மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு இப்போட்டி நடைபெற்றது.
கழகத்தின் தலைவரான பிரதி அதிபர் ஏ.பத்தாஹ் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப வைபவத்தில் கழகத்தின் செயலாளர் ஏ.ஆர். சாதிக், பொருளாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல். முனாப், முகாமையாளர் மே.ஹமாமுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


6 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
07 Mar 2026