2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இறுதிப்போட்டிக்குள் ஈவினை கலைமதி அணி தெரிவு

George   / 2015 மே 05 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இளைஞர் சேவை மன்றத்தின் கோப் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் புட்சல் என்னும் அணிக்கு 5 பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஈவினை கலைமதி அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

காரைநகர், தெல்லிப்பழை, உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர் கழகங்கள் பங்குபற்றும் இந்தச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி, திங்கட்கிழமை(04) மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தெல்லிப்பழை மகாஜனன்ஸ் இளைஞர் கழக அணியும், ஈவினை கலைமதி இளைஞர் கழக அணியும் மோதின.

முதற்பாதியாட்டத்தில் கலைமதி அணி, ஒரு கோலைப் பெற்றது. இரண்டாவது பாதியாட்டத்தில் கலைமதி அணி மேலும் ஒரு கோல் பெற்றது. போட்டியின் இறுதி தருணத்தின் மகாஜனன்ஸ் அணியினர் ஒரு கோலைப் பெற்றனர்.

இறுதிவரையில் இந்தக் கோல்கள் நீடிக்க கலைமதி அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இறுதிப்போட்டியில் மயிலங்காடு ஞானமுருகள் இளைஞர் அணியை எதிர்த்து கலைமதி இளைஞர் அணி மோதவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .