2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியனானது வசாவிளான் மத்திய கல்லூரி

Editorial   / 2019 ஜூன் 15 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன் 

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டத் தொடரில் வசாவிளான் மத்திய கல்லூரி சம்பியனானது. 

புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையை வென்றே வசாவிளான் மத்திய கல்லூரி சம்பியனானது.

இப்போட்டியின் முதலாவது செட்டை 25-22 என்ற புள்ளிகள் கணக்கில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை வென்றபோதும், அடுத்த இரண்டு செட்களையும் 25-16, 26-24 என்ற வகையில் கைப்பற்றிய வசாவிளான் மத்திய கல்லூரி சம்பியனானது.

இத்தொடரில் மூன்றாமிடத்தை முத்துத்தம்பி மகா வித்தியாலயம் பெற்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .