R.Tharaniya / 2025 ஜூன் 23 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (23) அன்று இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் மொழித் தினப் போட்டி, கணித ஒலிம்பியாட் போட்டி , இளம் விஞ்ஞானிகள் போட்டி, மெய்வல்லுநர் திறனாய்வு ஆகிய போட்டிகளில் வலய மட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்டம் ஆகியவற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பூ மாலை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வின் போது, மாணவர்களை தயார்படுத்தி, பயிற்றுவித்த ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.




எச்.எம்.எம்.பர்ஸான்
9 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
3 hours ago