2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

ரிஷியுதன் பாராட்டி கெளரவிப்பு

Mithuna   / 2023 நவம்பர் 29 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பிரிவு இரண்டு கடினபந்து கிரிக்கெட் தொடரில், பத்தரமுல்ல ஜயவர்த்தன அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்துவீசி ஓட்டமெதுவும் கொடுக்காமல் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி பெரும் சாதனையொன்றை நிலைநாட்டியிருந்தார். 

இம்மாணவன் எதிர்காலத்தில் தலைசிறந்த விளையாட்டு வீரனாக மிளிர்வதுடன், இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணியில் இணைந்து தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆதங்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் அதன் விளையாட்டுத் துறைக்கான உப தலைவர் ரஜீவ் நிர்மலசிங்கம், செயலாளர் ஆர். இவங்கோவன் உட்பட பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்வில் இச் சாதனை வீரனுக்கு நினைவுச் சின்னமும் 1987 ஆம் ஆண்டு பழைய மாணவர்களால் கடினபந்து கிரிக்கெட் துறைக்கான சகல விளையாட்டு உபகரணங்களும் அடங்கிய பொதி, சீருடை, காலணி கொள்வனவு செய்வதற்கான பண வவுச்சர் என்பவற்றுடன் பழைய மாணவரான விநாயகமூர்த்தி ஜனகனால் ஒரு வருடத்துக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X