2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டுக் கழகங்களுடனான கலந்துரையாடல்

Mithuna   / 2023 டிசெம்பர் 03 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப். முபாரக் 

மூதூர் பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுடனான விசேட கலந்துரையாடல் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக்கின் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மூதூர் பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட 44 விளையாட்டுக் கழகங்களின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், விளையாட்டுக் கழகங்களின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் தன்னார்வ செயற்பாடுகள் தொடர்பாகவும் கழந்துரையாடப்பட்டது.

மேலும் 15 பேர் கொண்ட பிரதேச விளையாட்டு குழவும் அமைக்கப்பட்டது. அத்துடன் கலந்து கொண்ட கழகங்களால் பின்வரும் தீர்மானம்களும் எடுக்கப்பட்டன.

  • விளையாட்டுத் துறையை முன்னேற்றும் பொருட்டு சிறந்த வீரர்களை இனங்கண்டு அவர்களுக்கான பயிற்சி முகாம்களை நடாத்தல்.
  •  சிறந்த விளையாட்டு வீரர்களை கௌரவித்தல்.
  • அனர்த்த காலங்களில் பிரதேச செயலகத்தோடு இனைந்து தொண்டுபணிகளில் ஈடுபடல்.

டெங்கு ஒழிப்பு மற்றும் சிரமதானங்களில் பங்குபற்றல்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X