Mayu / 2024 நவம்பர் 07 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை மாவட்டம், அகலவத்தை, டார்டன்பீல்ட் பகுதியில் இயங்கிவரும் கணபதி அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் தன்னார்வ பணிகளை கௌரவிக்கும் முகமாக ஆசிரியர்களுக்கு கௌரவ நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சமூக சேவகர் முத்துலிங்கம் துரைராஜாவின் ஒருங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கணபதி அறநெறி பாடசாலையின் நிறுவனர் சதாசிவம் உதயசாந்தன் அறநெறி ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

இந்த சிறப்பு கௌரவிப்பு நிகழ்வில், சமூக தன்னார்வலர்கள், ஆன்மீகவாதிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோருடன் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
14 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago