2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

’’குஷ்’’ போதைப் பொருளுடன் நால்வர் கைது

Janu   / 2025 மே 22 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 7 கோடியே  50 இலட்சம்  ரூபாய் பெறுமதியுடைய  "குஷ்" போதைப் பொருளுடன் “ரெட் சேனல்” ஊடாக  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து     வெளியே கொண்டு செல்ல முயன்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு-02 ஐ  சேர்ந்த 57 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் விமான நிலைய பாதுகாப்பு கேமரா அமைப்பைக் கண்காணித்த போது, இந்தக் கும்பலின் ஏனைய  மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய மூவர்  கொழும்பு வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 45,42  வயதுடைய தம்பதியினர் மற்றும் கொழும்பு - 15 இல் வசிக்கும் ஒரு தொழிலதிபர் என தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .