2024 மே 25, சனிக்கிழமை

நடித்து கப்பம் பெற்றவர் கைது

Janu   / 2024 ஜனவரி 09 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொடை  மா போதல பிரதேசத்தில் ,   பாதாள உலகத்தை சேர்ந்தவர் போல்  நடித்து 15 இலட்சம் கப்பம் கோரி அதிலிருந்து 5 இலட்சம் பணத்தை பெற்றுக்கொண்ட ஒருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (09) பதிவாகியுள்ளது.    

மினுவாங்கொடை ,  மா போதல பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சந்தேக நபர் பாதாள  உலகத்தை சேர்ந்தவர் என்ற பெயரில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு 15 இலட்சம் கப்பம் கோரியதாக மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  முறைப்பாட்டிற்க்கமையவே  குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .