2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

Janu   / 2025 மே 18 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 40 இலட்சம்  ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சாவுடன் 23 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாவுல, பிபில - நிகலந்த  பகுதியை சேர்ந்தவராவார்.

சந்தேக நபரிடமிருந்து 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 7 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.   

 பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, மாலபே, கஹந்தோட்டை வீதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .