2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

போலாந்து தம்பதியினர் மீது தாக்குதல்

Mayu   / 2024 ஜனவரி 17 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகரில் உள்ள சுற்றுலா விடுதியில், போலந்து நாட்டு சுற்றுலா தம்பதிகளை விடுதியின் உரிமையாளர் தாக்கியதாக தம்பதியினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

போலந்து சுற்றுலா தம்பதியை தாக்கிய போது ஹோட்டல் உரிமையாளர் அதிகளவில் குடிபோதையில் இருந்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலந்து நாட்டு சுற்றுலா தம்பதியினர் ஆன்லைன் மூலம் விடுதியில் அறை புக் செய்ததாகவும், ஆனால் இணையத்தில் குறிப்பிட்டுள்ள வசதிகள் ஹோட்டலில் இல்லை என்ற காரணத்தால் அங்கு தங்க மறுத்ததாகவும் அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

தம்பதியினரை தாக்கிய ஹோட்டல் உரிமையாளரை கண்டுபிடிக்க கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .