2025 ஜூன் 16, திங்கட்கிழமை

மத்திய கிழக்கிலிருந்து 116 பேர் வருகை

Editorial   / 2020 நவம்பர் 26 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 116 இலங்கையர்கள், இன்று(26) அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருந்தோரே இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, அபுதாபியில் இருந்து 42 பேரும், கட்டாரிலிருந்து 39 பேரும், ஓமானிலிருந்து 35 பேரும் அந்நாடுகளின் விமானங்கள் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளனர். 

நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X