Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Janu / 2024 டிசெம்பர் 30 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - நுரைச்சோலை, மாம்புரி பகுதியில் வீடு நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் நால்வருக்கு மின்சாரம் தாக்கியதில், அதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்றுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் சோல்டன் மற்றும் மதீனா நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நுரைச்சோலை – மாம்புரி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த கட்டடத்தில் இரும்பிலான பலாஞ்சு எனும் ஏணியின் மீது ஏறி, வேலை செய்து கொண்டிருந்த போதே குறித்த மூவர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.
இதன்போது அங்கு 11 பேருக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்துகொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. குறித்த வீட்டினை நிர்மாணிப்பதற்காக அந்த வீட்டின் உரிமையாளர் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு வழங்கியதுடன், அந்த ஒப்பந்தக்காரர் பல தொழிலாளர்களை ஈடுபடுத்தி அந்த வீட்டின் வேலைகளை செய்துவந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற போது, இரும்பில் செய்யப்பட்ட பலாஞ்சு மீது மின்சாரம் பாய்ந்ததில் அங்கு கட்டட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து, அந்த இளைஞனை காப்பாற்றும் நோக்கில் அங்கிருந்த மூவர் முயற்சி செய்த போது அம்மூவரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் உயிர் பிழைத்துள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஸீன் ரஸ்மின்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
01 May 2025