2025 மே 12, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Janu   / 2025 மே 04 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை - கொழும்பு வீதி, பாதுக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகெதர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (04)  இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதுக்க பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X