Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
திருமதி ஜெயகாந்தாவின் 'காதலெனும் சோலையிலே' நூல் வெளியீடும் எழுத்தாளர் ஒன்றுகூடலும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு அமெரிக்க இலங்கை மிஷன் திருச்சபை மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் பேரவை, செங்கதிர் வாசகர் வட்டத்துடன் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தன.
செங்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் த.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மூத்த எழுத்தாளர் ரா.நாகலிங்கம் அன்பு மணி மற்றும் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் கலாசார பணிப்பாளர் எதிர்மன்னசிங்கம், தொழிலதிபர் நாகராஜா செபமாலை உட்பட எழுத்தளர்கள், கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட திருமதி ஜெயகாந்தா 'ஜேர்மனி மலை மகள்' எனும் இலக்கியப் பெயரில் எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
29 minute ago
1 hours ago