Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 25 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கொழும்பு, வெஸ்லி கல்லூரியில் நீச்சல் தடாகமொன்றை நிர்மாணிப்பதற்கு நிதி சேகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இசை நிகழ்ச்சியொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
'மதுரகானம்' எனும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியானது தென்னிந்தியப் பாடகர் மதுர குரலோன் மதுபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறவுள்ளது. அத்துடன,இ இந்திய ஜூனியர் சூப்பர் சிங்கர்களான நித்தியஸ்ரீ, ஸ்ராவன் ஆகியோருடன் இந்திய திரைப்பட நடனக் கலைஞர் ஜெயலக்ஷ்மியின் நடனங்களும் இதில் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, விஜய் தொலைக்காட்சி அலைவரிசைப் புகழ் சிவகார்த்திகேயன் இந்த இசை நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கவுள்ளார். நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த தென்னிந்திய கலைஞர்களை படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
20 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
1 hours ago