2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் இலக்கிய வேலைப்பட்டறை

Kogilavani   / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கான ஒருநாள் இலக்கிய வேலைப்பட்டறை இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் ஆரம்பமாகியது.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சினால் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மாவட்ட கலாசார அதிகாரி கே.ரவீந்திரனின் தலைமையில் இவ் இலக்கிய பட்டறை ஆரம்பமானது.

இந்நிகழ்வில் மட்;டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், பிரபல கவிஞர்களான சாந்திமுகைதீன், ரீ.எல்.ஜவ்பர்கான் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

மூத்த எழுத்தாளர்களான ஜுனைதா ஷெரீப், திருமதி மண்டூர் அசோகா ஆகியோர் விரிவுரைகளை நடாத்தினர்.
கலாசார உத்தியோகத்தர் ஏ.எம்.ஜெயிலாப்தீன் மதனியின் நெறிப்படுத்தலில் இலக்கிய வேலைப்பட்டறை நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .