2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'கனவுகளுக்கு மரணம் உண்டு' நூல் வெளியீட்டு

Super User   / 2012 ஜனவரி 29 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

கிண்ணியா கவிஞர் ஏ.நஸ்புல்லாஹ் எழுதிய 'கனவுகளுக்கு மரணம் உண்டு' எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு வைபவம் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கிண்ணியா கவிஞர் ஏ.எம்.எம்.அலியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம். பாயிஸ், கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலய கணக்காளர் எஸ்.எம்.அஸீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த வருடம்  இந்திய, காயல்பட்டினத்தில் இடம்பெற்ற இலக்கிய விழாவில் கிண்ணியாவிலிருந்து இலக்கிய பங்களிப்புச் செய்த எழுத்தாளர்களான கலாபூஷணம் ஏ.எம்.எம்.அலி, மற்றும் கவிஞர் ஐ.ஹசன்ஜி ஆகியோர் இந்நிகழ்வில் பாராட்டப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .