2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'எண்ணங்களில் உணர்வெழுதி' ஓவிய கண்காட்சி

Kogilavani   / 2012 மே 20 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக விரிவுரையாளரும் பிரபல ஓவியருமான கமலச்சந்திரனின் 'எண்ணங்களில் உணர்வெழுதி' எனும் தலைப்பிலான ஓவிய கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைகழக அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் பிரதம அதிதியாகவும் கிழக்கு பல்கலைகழக பேராசிரியர் சி.மௌனகுரு கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது, சமாதானம், போர், சுனாமி, இயற்கையின் கொடுமை, அடிமைவாழ்வு, யதார்த்தம், பட்டிணி அவலம் உட்பட பல்வேறு எண்ணக்கருக்களில் உருவாக்கப்பட்ட சுமார் 100 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படியுருந்தன.

இக்கண்காட்சியை பெரும் எண்ணிக்கையானோர் பார்வையிட்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .