Editorial / 2025 நவம்பர் 21 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பாறை சரிவால் கடந்த மூன்று நாட்களாக தடைப்பட்டிருந்த பதுளைக்கான ரயில் சேவை வழமைக்கு திரும்பியது
ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதை மீண்டும் திறக்கப்பட்டது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் இரவு நேர அஞ்சல் ரயில் இயந்திரம் இடிந்து விழுந்த பாறை சரிவில் சிக்கி அடைபட்டது.
அதன்படி, மூன்று நாட்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் ரயில் பாதை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட பிற ரயில்கள் வெள்ளிக்கிழமை (21) முதல் வழக்கம் போல் இயங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
9 minute ago
53 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
53 minute ago
58 minute ago