Sudharshini / 2015 ஜனவரி 31 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கிருஷ்ணப்பிள்ளை புண்ணியமூர்த்தி எழுதிய, பாடசாலை முகாமைத்துவம் கோட்பாடுகளும் பிரயோகங்களும் நூல் வெளியீடு மட்டக்களப்பு தாளங்குடாவிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரி மண்டபத்தில் வியாழக்கி;ழமை (29) நடைபெற்றது.
பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூல் வெளியீட்டு உரையை ஆசிரியம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ரீ. மதுசூதனன் வழங்கினார்.
இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட முன்னாள் பீடாதிபதி எம். செல்வராஜா, மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி தொடருறுக் கல்வி உப பீடாதிபதி எம்.சி. ஜுனைட், நிதியும் நிருவாகமும் உபபீடாதிபதி எஸ். ஜெயக்குமார், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப் பணிப்பாளர் கே. சத்தியநாதன், பட்டிருப்பு கல்வி வலயப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம், விரிவுரையாளர்கள், ஆசியரியர்கள், ஆசிரிய பயிலுநர் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
27 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
47 minute ago
2 hours ago