2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

முழுநிலா நாள் கலை விழா

Kogilavani   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகான கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தினால் நடத்தப்பட்ட முழுநிலா நாள் கலைவிழா கிளிநொச்சி மகாவித்தியாலய மண்டபத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்றது.

வலயக்கல்விப்பணிப்பாளர் க.முருகவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப்பணிப்பாளர் சு.ஆனந்தசிவம் கலந்துகெண்டார்.

கிராமிய நடனங்கள், குழுப்பாடல், விசேட தேவையுடைய மாணவர்களின் இசையும் அசைவும் ஆகிய நிகழ்வுகள் இதன்போது நடைபெற்றன.

வடமாகாண சபையின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வில் வடமாகாண சபை சார்பாக அமைச்சர்கள்  உறுப்பினர்கள் எவரும்; இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X