Gavitha / 2015 ஏப்ரல் 23 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமுறைக்கலா மன்றத்தின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு நடத்தப்படும் பொற்தூறல் நிகழ்வில், இந்த மாதத்துக்கான சித்திரை திங்கள் பொற்தூறல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (25) மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம்
திருமறைக்கலாமன்றம் கலைத்தூது கலையகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் உபஅதிபர் ச.லலீசன் கலந்து கொள்ளவுள்ளார்.
இதன்போது, நல்லை க.கண்ணதாஸ் வழங்கும் சிறப்பு தாள வாத்திய அரங்கம், திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் நடன மாணவிகள் வழங்கும் நள தமயந்தி நாட்டிய நாடகம் ஆகியன இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .