Kogilavani / 2015 மே 10 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்
கவிதாயினி விக்டர் சாந்தி எழுதிய 'உயிர் சுமந்த சுமை' கவிதை நூல் வெளியீடு பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (07) யோ.புரட்சி தலைமையில் நடைபெற்றது.
நூலின் விமர்சன உரையை கவிஞர் சமரபாகு சீனா உதயகுமார் ஆற்றினார். நூலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், வினோரோகராதலிங்கம் இணைந்து வெளியிட, வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, தமிழ் எப்.எம்.பொக்கிசம் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ரி.எஸ்.முகுந்தன், கிளிநொச்சி வலயக்கல்வி திட்டமிடல்; பணிப்பாளர். திருமதி புவனராஜா, அருட்தந்தை கான்ஸ்போவர் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


19 minute ago
19 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
19 minute ago
26 minute ago