2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

சதங்கை நாதம்

Menaka Mookandi   / 2016 ஜூன் 17 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

நல்லைக் கலாமந்திர் நடனாலய மாணவர்கள் வழங்கும் 'சதங்கை நாதம்' நடனம் ஆற்றுகை எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை உபஅதிபர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும், சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை விரிவுரையாளர் கலாகீர்த்தி ஸ்ரீமதி சாந்தினி சிவநேசன், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் கலாபூசணம் ஸ்ரீமதி பத்மினி செல்வேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் விசேட கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X