2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பரத நாட்டிய அரங்கேற்றம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியின் நடன ஆசிரியர் நிருத்தியவாணி திருமதி சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் மாணவியும் திரு திருமதி பாஸ்கரன் அருள்மொழி அவர்களின் புதல்வியுமான திருமகள் பாஸ்கரனின்  பரத நாட்டிய அரங்கேற்றம், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் கலாநிதி தமிழ்மணி அளங்கன் தலைமையில்  வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், நுவரெலியா கல்வி வலயத்தின் முன்னாள் ஆசிரியர் ஆலோசகர் குகாநந்தினி இராதாகிருஷ்ணன், விஷேட விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் அ.ந.சிவசக்தி, அகில இலங்கை இந்து மாமன்ற பொதுசெயலாளர் உடுவை சி.தில்லை நடராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, புத்தகமொன்று வெளியிடப்பட்டதுடன், மாணவி திருமகள் பாஸ்கரன், நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியின் நடன ஆசிரியர் நிருத்தியவாணி திருமதி சூரியயாழினி வீரசிங்கம் ஆகியோர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .