2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கலாபூஷணம் அன்புடீன் கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்கு தெரிவு

Super User   / 2012 ஒக்டோபர் 17 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கலாபூஷணம் அன்புடீன் - இந்த வருடத்துக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கலந்தர்லெப்பை எனும் பெயரைக் கொண்ட அன்புடீன் - அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனையை பிறப்பிடமாக கொண்டவர்.

கலை, இலக்கியச் செயற்பாடுகளில் இவர் சுமார் 35 வருட காலமாக ஈடுபட்டு வருகின்றார். முகங்கள், சாமரையில் மொழிகலந்து போன்ற கவிதைத் தொகுதிகளும், நெருப்பு வாசல் எனும் சிறுகதை தொகுதியும் இவருடைய படைப்பு நூற்களாகும்.

தபால் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள அன்புடீன் - பல்வேறு சமூக சேவை அமைப்புக்களில் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்து வருகின்றார்.

அன்புடீன் உட்பட  - 09 தமிழ், முஸ்லிம்கள் மேற்படி முதலமைச்சர் விருதினைப் பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலக்கியம், கவிதை, சிறுகதை, கலை போன்ற துறைகளில் உயர்வான ஆக்கப் பணி புரிந்தமைக்காகவே இவர்களுக்கு இவ் விருது வழங்கப்படவுள்ளது.

திருகோணமலையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண இலக்கிய விழாவில், இவகளுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.
                                                                                                                                                                                                      


You May Also Like

  Comments - 0

  • mansoor a. cader Thursday, 18 October 2012 08:47 AM

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    farzan.AR Thursday, 18 October 2012 02:46 PM

    மகிழ்ச்சியான செய்தியிது அவருக்கும் அனைவருக்கும்.

    Reply : 0       0

    sajeer sm Wednesday, 24 October 2012 05:32 PM

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .