2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நீள்கிறது சுனாமித் துயர்

Kogilavani   / 2014 டிசெம்பர் 24 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒரு சகாப்தம் மௌனமாய்
ஓடி ஒழிகிறது
உறவுகள் இன்றும் நிசப்தமாய்

நினைவுத் துயிலில் கண்ணீர் தெளிக்கிறது
உதிர்ந்த உயிர்கள் நினைவில் ஊரெங்கும்
ஞாபக மெழுகுவர்திகள் அழுகின்றது

தீபாவளி,கார்த்திகைத் தீபங்கலோடு
சுனாமி அஞ்சலித் தீபமும் உலகில் மூன்றாகின்றது

எங்கும் ஜீவன்களின் அழுகுரல் தவிப்பு
மீட்டிச் செல்லும் அந்த துயர் அழைப்பு
கல்லையும் கரையச் செய்யும் நினைவுப் பதிப்பு
சுனாமி அரக்கன் தந்த வடுக்களின் வைப்பு
ஒவ்வொறு  விழிகளிலும் கண்ணீர் கொதிப்பு
இன்றும் மாரடித்து மண்ணில் புரல்கிறது உறவுத் தோப்பு

துயர் கடந்து துயில் எழுந்த போதும்
மீட்டல் தரும் டிசெம்பர் இருபத்தியாறு
மனதை வறுத்து உதிரத்தைக் கொட்டும்
ஆறாத நீண்ட துயரை கடல் தாயே நீ பாரு

ஆற்றுப்படுத்த  முடியாத நினைவுகளாய்
எம்மவரோடு நீள்கிறது சுனாமித் துயர் என்றும்

எஸ்.கார்த்திகேசு

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .