Janu / 2024 ஏப்ரல் 21 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது .
பிறைந்துறைச்சேனை தாஜ்மஹால் வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான சுலைமா லெப்பை ஜமால்தீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
குறித்த நபர் , இன்னொருவரிடம் கடனாக கொடுத்த மூவாயிரம் ரூபாய் பணத்தை கேட்டபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்தக் கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது .
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சனிக்கிழமை (20) மாலை 4 மணியளவில் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது .
மேலும் இது தொடர்பில் சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்
43 minute ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
19 Nov 2025