2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

73 வருட நிறைவையொட்டி கட்டிடம் கையளிப்பு

Janu   / 2024 மார்ச் 11 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவையொட்டி  திருகோணமலை மொரவெவ சிங்கள வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் ஒன்று கூடல் மண்டபம்   மாணவர்களிடம் திங்கட்கிழமை  (11)  கையளிக்கப்பட்டுள்ளது .

இலங்கை விமானப்படை வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டிடம்  
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது .

"பிருணு குசக்,பிருனு ஹிசக்"அமைப்பின் ஊடாக 53 நாட்களில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதாகவும், வடக்கு மாகாணத்தில் 73 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் விமானப்படை தளபதி இதன் போது தெரிவித்துள்ளார் .

மேலும்  இந்நிகழ்வில் மொரவெவ விமானப்படை தளத்தின் பொறுப்பதிகாரி ஹேமந்த பால சூரிய , பாடசாலையின் அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர் .

அப்துல்சலாம் யாசீம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X