2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

730 நாட்களை கடந்து மயிலத்தமடு அறவழி போராட்டம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப் போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15.09.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், ,730 வது நாளாக திங்கட்கிழமை (15 ) அன்று சித்தாண்டியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

இதற்கு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவமாணவர் ஒன்றியமும் பேராதரவை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் , கால்நடைகளை கொல்லாதே ! அரசே வேடிக்கை பார்க்காதே ! உரிமைக்காக குரல்கொடுப்போம் ! இரண்டு வருடங்கள் கடந்தும் பண்ணையாளர்கள் ஏமாற்றப்படுவது ஏன், பண்ணையாளர்களுக்கு நிரந்தர மேய்ச்சல் தரையை வழங்கு என்று பல்வேறு கோஷங்களை எழுப்பியும் , பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இ.சிறிநாத், இ.சாணக்கியன் , பிரதேச சபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X