2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

இலக்கிய விழாவுக்கான ஆரம்ப கட்டப் போட்டிகள்

Janu   / 2023 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஸாகிர்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற 20 அரச விழாக்களுள் அரச இலக்கிய விழாவிற்கான ஆரம்ப கட்டப் போட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மொழி மூலமான பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பிரதேச கவிதை பாடல் போட்டி, கையெழுத்து பிரதியாக்கப் போட்டி, சிறுகதைப் போட்டி ஆகிய போட்டிகளில் போட்டியாளர்களைத் தெரிவு செய்வதற்காக மாவட்ட செயலாளர் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் ஆகியோரது வழிகாட்டலில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றின்ஸானின் மேற்பார்வையில் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தற்சமயம் மேற்படி பிரயோகக் கலைகளுக்கான தெரிவுகள் இடம் பெற்று வருகின்றன.

அதனடிப்படையில், அட்டாளைச்சேனை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, கல்முனை வடக்கு, நாவிதன் வெளி, சம்மாந்துறை, இறக்காமம், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோயில், பொத்துவில் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்படி போட்டிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், மாவட்ட மட்ட தெரிவுக்கான போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி நடைபெற இதற்குரிய பூர்வாங்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X