Freelancer / 2023 ஜனவரி 12 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர். ஜெயஸ்ரீராம்
தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வாகரை, ஊரியன்கட்டு பிரதேச மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கு நிகழ்வு, ஊரியன்கட்டு பாடசாலை மண்டபத்தில் நேற்று முன்தினம் (10) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் வை. மங்களதர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கௌரவ அதிதிகளாக வாகரை பிரதேச 233 ஆவது படைப் பிரிவின் பிரிக்கேடியர் வசந்த கேவகே, நாவலடி கஜபா ரெஜிமன்ட படைப்பிரிவின் உயர் அதிகாரி லசந்த, கல்குடா வலயக் உளவளத் துறை உதவி கல்விப் பணிப்பாளர் விஷ்வ ஜித்தன் ஆகயோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சுமார் 200 குடும்பங்களுக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினர் இதற்கான நிதி அனுசரனையை வழங்கியிருந்தனர்.

5 minute ago
20 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
24 minute ago