2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

ஐஸூடன் இருவர் கைது

Janu   / 2025 ஒக்டோபர் 28 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று  பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட ஒலுவில்  பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளுடன்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவரிடமிருந்து  145 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளும் மற்றைய நபரிடமிருந்து 135  மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்களை திங்கள் கிழமை (27) அன்று அக்கரைப்பற்று  நீதவான்  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்திய போது நவம்பர்  9 ஆம்  திகதிவரை  விளக்கமறியலில்  வைக்குமாறு  நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

றிபாஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X